ஆட்டிப்படைக்கும் கொரோனா - #PrayForKerala!!

புதன், 7 அக்டோபர் 2020 (11:46 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #PrayForKerala என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 67,57,131 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 986 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,04,555 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 57,44,693 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,07,883 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதில் குறிப்பாக கேரளாவில் ஒரே நாளில் 7,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 25 பேர் மரணம் அடைந்ததாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அதாவது  தேசிய அளவில் டெஸ்ட் பாசிட்டிவ் சதவீதம் 8.3 ஆகும். கேரளாவில் இது 7.2 சதவீதமாகும்.
 
கேரளாவில் இப்படியே நிலைமை போனால் அங்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை உருவாகக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே சமூக வலைத்தளமான டிவிட்டரில் #PrayForKerala என்ர ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்