காவிரி பிரச்சனையில் நடந்த கலவரத்தில் 3 பேருக்கு தூப்பாக்கி சூடு. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் கலவரத்தில் ஒரு சிலர், பாதுகாப்பு நின்ற காவல்துறையினரின் வாகனத்துக்கு தீவைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 3 பேர் காயமடைந்தனர். பின்னர் மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு நபரும் உயிரிழந்தார். இதுவரை கலவரத்தில் மொத்தம் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.