புருனே நாட்டிற்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

Mahendran

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:42 IST)
பிரதமர் மோடி புருனே நாட்டிற்கு அரசு முறை சுற்றுப் பயணமாக கிளம்பி உள்ளதாகவும் அங்கு அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று கிளம்பி சென்றார். முதலாவதாக அவர் புருனே நாட்டிற்கு செல்லும் நிலையில் இந்தியா புருனே இடையே தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவை அடுத்து நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி இன்று புருனே செல்கிறார். மேலும் அவர் புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் செல்லும் நிலையில் சிங்கப்பூரிலும் இரு தரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதாக  றப்படுகிறது.

பிரதமர் மோடி, புருனே,சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்வதால் இந்த இரு நாடுகளிடம் இந்தியாவின் நட்புறவு நெருக்கமாகும் என்று கூறப்படுகிறது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்