சாமியாரின் பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு: இருமாநிலங்களில் பதட்டம்

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (07:29 IST)
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பதட்ட நிலை காணப்படுகிறது.



 
 
கடந்த 2002ஆம் ஆண்டு இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
 
சாமியாருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் இரு மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் இருமாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சனை எழும்பாமல் இருக்க மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்