"ஆபரேஷனில் சில முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி, திறமையுடன் முடிக்கப்பட்டுள்ளன. எப்போது, எப்படி நடந்தது என்பதற்கான முழு தகவலையும், சரியான நேரத்தில் வெளிப்படுத்தப்படும். அதுமட்டும் இல்லாமல், தற்போது நிலவும் சூழ்நிலையை தவறாக ஊகித்து, உண்மையல்லாத தகவல்களை பகிர வேண்டாம்," என்று விமானப்படை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தின் அடிப்படை காரணம், ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான். அதில் சுற்றுலா சென்ற 26 பேர் உயிரிழந்தனர். அதில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி வினய் நர்வால் உள்ளிட்டோர் இருந்தனர்.