திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:35 IST)
திருப்பதி மலை பாதையில் மேலும் ஒரு சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 ஏற்கனவே திருப்பதி மலை பாதையில் சிறுத்தை நடமாடுவதாக கூறப்பட்டது என்பதும் ஒரு சிறுமியை சிறுத்தை தூக்கி சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து 3 சிறுத்தைகளை பிடித்தனர் என்பதும் அதன் பிறகு ஒரு சிறுத்தை சமீபத்தில் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது வனத்துறையினர் வைத்த கூண்டில் ஐந்தாவது சிறுத்தை சிக்கி உள்ளது.  இதுவரை 5 சிறுத்தைகள் பிடிக்கப்பட்ட நிலையில் இன்னும் திருப்பதி மலை பாதையில் சிறுத்தை நடமாட வாய்ப்பு இருப்பதால் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் மலை பாதைகள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்