ராகுல் காங்கிரஸ் தலைவரா? 1% கூட வாய்ப்பே இல்லை: மூத்த தலைவர் அறிவிப்பு!

சனி, 29 ஜூன் 2019 (09:37 IST)
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வதற்கு ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை என காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். 
 
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை பதிவு செய்த நிலையில், ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், காங்கிரஸ் கமிட்டியினர் அதை ஏற்கவில்லை. இருப்பினும் தனது முடிவில் மாற்றத்தை கொண்டுவராமல் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என உறுதியாக உள்ளார். 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது,  ராஜினாமா முடிவில் ராகுல் பின்வாங்காமல் இருக்கிறார். இனிமேல், காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடர்வதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. அடுத்த தலைவர் பற்றி செயற்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்