ஆந்திராவில் 3 தலைநகரங்களா? ஐகோர்ட்டில் வழக்கறிஞர் தகவல்

திங்கள், 22 நவம்பர் 2021 (12:57 IST)
ஆந்திராவில் மூன்று தலை நகரங்கள் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிகாலத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து தற்போது வழக்கறிஞர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளார்
 
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவை கைவிடுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் சட்டமன்றத்தில் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து ஆந்திராவில் ஒரே தலைநகர் மட்டுமே இருக்கும் என்பதும் மூன்று தலைநகரங்கள் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்