‘இண்டியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஆசை இல்லை: முதல்வர் அறிவிப்பு..!

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:06 IST)
‘இண்டியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்க ஆசை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்க விரும்புவதாகவும் பீகார் மூலம் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள முன்னணி கட்சி கட்சிகள் இணைந்து ‘இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த கூட்டணி அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் ‘இண்டியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்க தனக்கு ஆசை இல்லை என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் 
 
 ஆனால் அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியின் வியூகம், தொகுதி பங்கீடு, இதர செயல் திட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.  
 
‘இண்டியா' கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணி இல்லை என்றாலும் நிதீஷ் குமாருக்கு கூட்டணியில் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்