வெண்கலம் வென்ற வீராங்கனை சுட்டுக்கொலையா? அதிர்ச்சி தகவல்!

புதன், 10 நவம்பர் 2021 (19:16 IST)
வெண்கலம் வென்ற வீராங்கனை சுட்டுக்கொலையா? அதிர்ச்சி தகவல்!
வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா என்பவர் மர்ம நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும், கடந்த வாரம் நடந்த உலக கோப்பை மல்யுத்த போட்டியில் இவர் வெண்கலம் வென்று இருந்தார் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் திடீரென நிஷா தாஹியா சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. நிஷாவே இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்