குஜராத் மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்

திங்கள், 8 நவம்பர் 2021 (20:48 IST)
குஜராத் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பாகிஸ்தான் கடலோர காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் 10 பேர் மீது குஜராத் போலீசார் வழக்கு செய்தனர். மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் நேரில் விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்