பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? நிர்மலா சீதாராமன் பதில்

புதன், 24 மார்ச் 2021 (06:31 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த சில நாட்களாக உயரவில்லை என்றாலும் ஏற்கனவே மிக அதிகமாக உயர்ந்து விட்டதால் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும் என்ற கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார் 
 
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் அவ்வாறு பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி கொண்டு விட்டால் கண்டிப்பாக பெட்ரோல் டீசல் விலை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஒருசில திருத்தங்களுடன் மக்களவையில் நேற்று நிதி மசோதா நிறைவேறியது என்றும், கடந்த ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகை ஆண்டுக்கு 2.5 லட்சமாக லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததால் அதன் மீது விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த வரம்பு தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக உள்நாட்டு தொழில்களுக்கு உதவும் உதவி செய்வதற்காக குறிப்பாக சிறு குறு தொழில் நிறுவனங்கள் இந்த வரிகள் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்