ஊழல் புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்: ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

வியாழன், 2 ஜூன் 2022 (10:27 IST)
ஊழல் புகார் அளிப்பதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார் 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது ஊழல் புகார் அளிப்பதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 
 
லஞ்ச ஒழிப்பு துறைக்கு மொபைல் போனில் மூலம் புகைப்படம் வீடியோ ஆகியவற்றின் மூலம் புகார்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன் மூலம் வரும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் அளித்தவர் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் செயலி அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்