ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருந்தி அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, 2 ஆயிரத்து 500 கி.மீ. யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் 21ஆவது நாளான சனிக்கிழமை அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சரபா பஜார் பகுதிக்குச் சென்றார்.
அங்கு, மகாராஜா அக்ராசென் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்தார். பிறகு, யாத்திரையைத் தொடருவதற்காக அவர் திரும்பியபோது, அவரது முதுகுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த மின் வயர், அவரது இடது காதில் உரசியது.
இதில் ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.