பிறந்த நாள் விழாவில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கழிவறையில் பூட்டிய வாலிபர்கள்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (13:40 IST)
டெல்லியில் 3 வாலிபர்கள் நேபாளத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து, கழிவறையில் பூட்டி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.


 
 
நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகரில் தங்கி வேலை தேடி வந்துள்ளார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர் பழக்கமாகி வேலை தேடி தருவதாக கூறியுள்ளார்.
 
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை யோகேஷின் பிறந்த நாள் என்பதால் அவரை தன்னுடைய பிளாட்டிற்கு அழைத்துள்ளார் அந்த இளம்பெண். யோகேஷ் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் அந்த இளம் பெண்ணின் பிளாட்டிற்கு சென்றுள்ளார்.
 
அமித் மற்றும் ஷாலி என்ற தன்னுடைய நண்பர்களுடன் சென்ற யோகேஷ் அந்த பெண்ணை தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வற்புறுத்தி மது அருந்த வைத்துள்ளார். பின்னர் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கழிவறையில் அவரை பூட்டி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
 
அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வெளியே வந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலாத்காரம் செய்த வாலிபர்களில் அமித்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்