முதல் நாளிலேயே முடங்கிய நாடாளுமன்றம்..மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்..!

வியாழன், 20 ஜூலை 2023 (14:59 IST)
நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின்  அமளியால்  நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சபாநாயகர் அதை ஏற்கவில்லை 
 
உடனே நாடாளுமன்ற எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து முதல் நாளே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை தான் நாடாளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனாலும் நாளையும் இதே பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால் மழைக்கால கூட்டத்தொடர் சமூகமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது...
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்