அதானி விவகாரத்தால் மீண்டும் முடங்கிய நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:24 IST)
அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில் இன்று மீண்டும் அதானி விவகாரம் பாராளுமன்றத்தில் எழுந்த நிலையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது என்பதும் பட்ஜெட் மீதான வாதம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் அதானி விவகாரம் குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர் கட்சி எம்பிகள் முழக்கம் விட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்