மும்பையில் நிலச்சரிவால் கட்டுமானம் சரிந்து நாசமான கார்கள்!

திங்கள், 25 ஜூன் 2018 (15:29 IST)
மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் இன்று காலை 4 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பார்க்கிங் பகுதி இடிந்து சரிந்ததில் கார்கள் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இன்று காலை 4 மணி அளவில் மும்பையில் தென்பகுதியான வடாலாவில் அடுக்காமடி குடியிருப்பு ஒன்றில் வாகனங்கள் நிறுத்தப்படும் பார்க்கிங் பகுதி இடிந்து சரிந்தது.
 
நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்கள் இந்த சரிவில் சிக்கி சேதமடைந்தது. பின்னர் கிரேன் கொண்டு கார்கள் இடிபாடுகளில் சிக்கிய கார்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்