கேரளா மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கொச்சியில் அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ள மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கேரளா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் பல துறையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியவுடன் அதிக அளவில் பெண்கள் ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிய முதல் மெட்ரோ என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.