திருமணத்திற்கு மறுத்த இளைஞர்; ஆசிட் வீசிய பெண்! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:57 IST)
கேரளாவில் பேஸ்புக் மூலம் பழகிய இளைஞர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் உள்ள திருமணமாகாத இளைஞர் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண் கேட்க அதற்கு அவர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதால் இளைஞர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் இளைஞர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். தற்போது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்