கேரளாவில் மீண்டும் 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு

வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (18:32 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு தினம்தோறும் ஏற்பட்டு இருந்த நிலையில் நேற்று உச்ச கட்டமாக 31 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது, கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,007 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 18,997 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 1,81,209 என்றும் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,134என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,66,397  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்