கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல் இல்லை… முதல்வர் அறிவிப்பு!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:51 IST)
மத்திய அரசுக் கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்க்ளில் அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த மாட்டோம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கேரளாவில் அந்த சட்டம் அமல்படுத்தப் படாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்