தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எல்.ஏவுவதற்கான ஏவுதளம் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வருகிறது. குலசேகரப்பட்டினத்தில் இரண்டு ஏவுதளங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டு ஏவுதளங்கள் தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் தரம் கொண்ட நிலையில், அங்கு மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.