மனைவிகளுடன் பாலியல் உறவு…நேரலையில் லட்சக்கணக்கில் சம்பாதித்த நபர்…திடுக் சம்பவம்

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (20:01 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவிகளுடன் பாலியல் உறவு கொள்வதை வீடியோவாக எடுத்து அதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து அவரது இரண்டாவது மனைவி கொடுத்த புகாரில் பல  திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அவர் பத்தாம் வகுப்புத்தான் படித்தாலும் இணையதளம், மற்றும் கம்பியூட்டரில் கில்லாடியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவிகளுடன் பாலியல் உறவு கொள்வதை அவர்,வீடியோ எடுத்து, அதை தனது சப்ஸ்கிரைபர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதற்க்காக தனது வாடிக்கையாளர்களிடம், உடலை மட்டும் பார்ப்பதற்கும் ,முகத்தைப் பார்ப்பதற்கும் என தனித்தனியே கட்டணம் வசூலித்து அதன் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதித்துள்ளார்.

இதுகுறித்து அவரது இரண்டாவது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நபரின் குற்றத்திற்கு முதல்மனைவி உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்