வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.42,470 கோடி

புதன், 20 டிசம்பர் 2023 (13:45 IST)
இந்திய வங்கிகளில், வாடிக்கையாளர்கள் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை பற்றிய விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய வங்கிகளில் உரிமை எதுவும் கோரப்படாத வைப்புத் தொகையின் மதிப்பு குறித்து  மாநிலங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில்,  இந்திய வங்கிகளில்  உரிமை கோரப்படாத வைப்புத்தொகை  ரூ.42,470  கோடியாக  உள்ளது. அதில், ரூ.36,185  கோடி பொதுத்துறை வங்கிகளிலும், ரூ.6087 கோடி  தனியார் வங்கிகளிலும்  வைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்