இந்திய தடுப்பூசி புதிய கொரோனாவையும் தடுக்கும்: மத்திய அரசு

செவ்வாய், 29 டிசம்பர் 2020 (16:56 IST)
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த புதிய வைரசுக்கு எதிராகவும் நிச்சயம் வேலை செய்யும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
சீனா மூலம் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசுக்கு இப்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து பரவி வரும் கொரோனா வைரசுக்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டுமா? என்ற கவலை மக்கள் மனதில் எழுந்துள்ளது
 
இந்த நிலையில்  இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த புதிய வைரசுக்கு எதிராகவும் நிச்சயம் வேலை செய்யும் என்றும், எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் ஆகிய மாநிங்களில் கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாகவும்,  கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்