கடந்த சில நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம், அதாவது சனிக்கிழமை, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டது.
கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லை பகுதியில் எந்த வித தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவில்லை என்பதால், இந்திய எல்லை மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அமைதி திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.