இந்தியாவில் சதமடித்த ஒமிக்ரான்: பீதியில் மக்கள்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (10:53 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 1 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் பாதிப்பு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
 
ஆம், இந்தியாவில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 100 க்கும் மேலாக அதிகரித்து 111 என்றாகியுள்ளது. அதிகபட்சமாக மகாரஷ்டிராவில் 40 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (8), தெலங்கானா (8), குஜராத் (5), கேரளா (7), ஆந்திர பிரதேசம் (1), சண்டிகர் (1), தமிழ்நாடு (1), மேற்கு வங்கம் (1) உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்