தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு கீழ் பாதிப்புகள்: 157 பேர் பலி! – இந்தியாவில் நிலவரம்!

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (10:02 IST)
கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த தினசரி பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்கள் முன்னதாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் தற்போது கடந்த சில நாட்களாக குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது மீண்டும் 10 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9,436 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,44,08,132 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,27,754 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,37,93,787 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 86,591 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்