கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் தொலைபேசி மூலமாக வித்தியாசமான முறைகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒலி மூலம் நம்ப வைக்கும் மோசடிகள், மேலும் டிஜிட்டல் கைதுகள் என புதிய புதிய வகைகளில் திருடர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல தீர்வுகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இனி பரிச்சயமற்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் பின்னணியில் உள்ள நபரின் பெயர் நேரடியாக உங்கள் மொபைல் திரையில் தெரிய இருக்கும்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த புதிய அம்சத்தை விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளன.