இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடி தனது உரையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை பாராட்டிய அவர், “பயங்கரவாதத்தின் மையங்களை நாங்கள் தரைமட்டமாக்கினோம். பாகிஸ்தானின் பயங்கரவாத தலைமையகங்கள் இன்று இடிபாடுகளாக கிடக்கின்றன” என்று கூறினார்.