26 லட்சம் ஏழைகளுக்கு வீட்டு மனை ... ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு !

வியாழன், 5 மார்ச் 2020 (21:31 IST)
26 லட்சம் ஏழைகளுக்கு வீட்டு மனை ... ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு !

தெலுங்கானாவில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சியை வீழ்த்திவிட்டு, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். அப்போது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
இந்நிலையில், வரும் தெலுங்கு வருடப் பிறப்பு அன்று, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, ஆந்திராவில், 26 லட்சம் மக்களுக்கு 26 லட்சம் இலவச வீடுகளை இலவச பட்டாவுடன்  வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மார்ச் 25 ஆம் தேதி யுகாதி அன்று,சுமார் 43, 141 ஏக்கர் நிலம் ஏழை எளிய மக்களுக்கு வழங்க  மோகன் ரெட்டி தலைமையிலான அரசு எல்லாவித முன்னேற்பாடுகளையும் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்