வீட்டுப் பாடம் முடிக்காததால், இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி ஓட்டுநர் அஜய் என்பவரால் தலைகீழாக தொங்கவிடப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டான். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி, சிறுவனின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
மாணவனின் தாய், தலைமை ஆசிரியர் ரீனா தான் அஜய்யிடம் குழந்தையை தண்டிக்க சொன்னதாக குற்றம் சாட்டினார். மற்றொரு வீடியோவில், தலைமை ஆசிரியர் ரீனாவே மாணவர்களை அடிப்பது பதிவாகியுள்ளது. கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக, உடல் ரீதியான தண்டனைகளை தான் வழங்குவதாக தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.