ஒமிக்ரான் எதிரொலி: இந்த மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

திங்கள், 3 ஜனவரி 2022 (15:33 IST)
கோவாவில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே கேரளா கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊர் அடங்கின்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கோவா மாநில அரசு கேட்டுக்கொண்டது. 
 
மேலும் கொரோனா பரவல் காரணமாக, கோவாவில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்