நம் நாட்டுக்கு மொத்தம் 2 தந்தைகள்: மோடிக்கு துணை முதலமைச்சர் மனைவி புகழாராம்!

புதன், 21 டிசம்பர் 2022 (20:05 IST)
நம் நாட்டிற்கு மகாத்மா காந்தி ஒரு தந்தை என்றால் பிரதமர் மோடி ஒரு தந்தை என்றும் நம் நாட்டிற்கு இரண்டு தந்தைகள் என்றும் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பேசியபோது மகாத்மா காந்தி நமது தேசத்தின் ஒரு தந்தை என்றால் பிரதமர் மோடி இந்தியாவின் புதிய தந்தை என்றும் ஆக மொத்தம் நமது நாட்டில் இரண்டு தந்தைகள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
அவரது பேச்சுக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்