இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி: யார் யார் போட்டு கொள்ளலாம்?

ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (07:49 IST)
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தன என்பதும் பெரும்பாலானோர் இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்