தமிழகத்தில் இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது- தமிழக அரசு

சனி, 9 ஏப்ரல் 2022 (15:51 IST)
சீனாவில் இருந்து கடந்த 2020  ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு     நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்களையும் பொருளாதார சரிவையும்  ,உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த கொரொனா இந்தியாவில்  கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன..

இந்நிலையில் , தமிழகத்தில் இனி   தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வாரத்தில் நடத்தப்பட்டு வந்த கொரொனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது  தேவைப்பட்டால்  அந்தந்த பகுதிகளில் நிர்வாகம்  தடுப்பூசி முகாமை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்