முன்னாள் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு: மனைவிக்கும் பாதிப்புக் என தகவல்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (13:24 IST)
முன்னாள் பிரதமர் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மனைவி சென்னம்மா ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தனது டுவிட்டரில் தேவகெளடாவும் உறுதி செய்துள்ளார்
 
முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மனைவி தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 1997 ஏப்ரல் 21ம் தேதி வரை தேவகௌடா பிரதமராக இருந்தார் என்பதும், அதற்கு முன்னர் அவர் கர்நாடக மாநில முதல்வராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்