மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்: அதிர்ச்சி காரணம்!

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:57 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் மருமகளை மாமனார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசாத் என்ற 76 வயது நபர் ,  தனது மருமகள் காலை உணவு தர லேட் ஆனதால் ஆத்திரமடைந்து, திடீரென துப்பாக்கியால் மருமகளை சுட்டார் 
 
இதனால் வயிற்றில் குண்டடிபட்ட மருமகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இது குறித்து இன்னொரு மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் மாமனார் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்