இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரின் பெயர் கௌரவ் மற்றும் அஜித் என தெரிய வந்துள்ளது. ஐந்து லட்ச ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி அவர்கள் கொண்டு சென்றதாகவும், அந்த பணம் எங்கிருந்து வந்தது, எங்கு எடுத்து செல்கின்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.