இந்த நிலையில், இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த வளாகங்களை காலி செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
போலி நன்கொடையாக ரூ.18 கோடி, முன்கூட்டிய வாடகையாக ரூ.38 கோடி, விளம்பரங்களுக்கு ரூ.29 கோடி செலவிடப்பட்டதாக "எங்கு இந்தியா" மற்றும் ஏஜேஎல் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.
ஏற்கனவே இந்த வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. தற்போது இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களும் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுவது, அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.