அவர்களை கேலி செய்ய வேண்டாம்… போலீஸ் அதிகாரி டுவீட்

வியாழன், 11 ஜூன் 2020 (23:15 IST)
தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்று அறிவித்தது. ஆனால் அவர்களது காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களும் வருகைப்பதிவும் வைத்து  அவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட துணை கமிஷனர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த மாணவர்களை கேலி செய்ய வேண்டாம். என்னை சந்தித்த மாணவர் அனைவரும் செய்த கேலியில் மன உளைச்சல் அடைந்ததாக தெரிவித்தார். தேர்வு நடக்காமல் போனதற்கு அவர்கள் காரணமல்ல. அதிக நாட்கள் படித்தவர்களும் அவர்களே. #10thPublicExam என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்