ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ்காருக்கு ரூ.7 கோடிபிணையத் தொகை

செவ்வாய், 9 ஜூன் 2020 (23:28 IST)
கடந்த மாதம் 25 ஆம் தேதி  அமெரிக்காவில் மின்னியா பொலிஸ் ந்கரில் ஜார்ஜ் பிளாட் என்ற கருப்பினத்தவரை அமரிக்கா போலீஸ் அதிகாரி டிரெவிக் சவ்வின் கழுத்தை  நெறித்து கொன்றார். இது  உலக அளவில் பேசு பொருளாகி அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டது.
.
இந்நிலையில்,  ஜார்ஜ் பிளாடின் கொலை வழக்கில் அமெரிக்க போலீஸ் அதிகாரியின் ஜாமீனுகு இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் இக்கொலை வழக்கு சம்மந்தமாக டிரெவிக் சவ்வின் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை வரும் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்