மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு அபாயம்..டுவிட்டர் நிறுவனம் எதிர்ப்பு

வியாழன், 27 மே 2021 (19:57 IST)
டுவிட்டர் இந்தியா நிறுவனம் தங்களின் ஊழியர்களின்  பாதுகாப்புக்கும், மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கருத்துத்தெரிவித்துள்ளது.

உலகில் முன்ணி சமூக வலைதளங்களான டுவிஉட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவரை மத்திய அரசு விதித்துள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.

இந்தியாவில், மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டுமென விதிக்கப்படுள்ள கெடு இன்று முடியவுள்ள நிலையில் இதுகுறித்து அரசிடன் விளக்கம் கேட்க உள்ளதாக ஃபேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய விதிமுறைகளின்படின் ஐடி விதிகளுக்கு உட்பட்டு மக்கள் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாகிஅவும், அதேபோல் ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்ப்பாடுகள் பிப்ரவரி வரையில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இதைச் செயல்படுத்தும் காலத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளாது.

இந்நிலையில். டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள், புதிய விதிகலை ஏற்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் விதிகளை ஏற்காதநிறுவனங்கள் மீண்டும் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் டுவிட்டர் இந்தியா நிறுவனம் ஒரு மத்திய அரசு மீது ஒரு புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

அதன்படி, டுவிட்டரின் சேவையைத் தடுக்க காவல்துறையினர் மிரட்டுவதகவும் இது கவலை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், எங்கள் சேவையளிக்கும் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்