ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு ! மராட்டிய முதல்வர்

திங்கள், 29 ஜூன் 2020 (16:49 IST)
இந்தியாவில் மிகப் பெரிய தொழில்துறை மாநிலமான மாஹராஷ்டிராவில் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.  இந்நிலையில் அம்மாநில  முதல்வர்  உத்தவ் தாக்கரே வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு  அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் நாளையுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில்  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு வரும் ஜூலை 31 ஆம் தேதிவரை இன்னும் ஒருமாதத்திற்கு கொரொனாவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இன்று ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்