பாகிஸ்தானுக்கு ரகசியங்களை பகிர்ந்ததாக யூடியூபர் ஜோதி உட்பட சிலர் சமீப காலமாக கைது செய்யப்பட்டனர். "ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவில் உள்ள உளவு சொல்லும் துரோகிகளை பிடிக்கும் நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொருவராக மாட்டி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது CRPF வீரர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய வம்சாவளியினர் மூலம் நிதி பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் உளவு சொன்னதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.