15 லட்சத்தை நெருங்கிய இந்திய பாதிப்புகள்; 33 ஆயிரம் பலிகள்!

செவ்வாய், 28 ஜூலை 2020 (09:43 IST)
இந்தியாவில் கடந்த மூன்று நாட்களுக்குள்ளாக புதியதாக 1 லட்சம் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 15 லட்சம் பாதிப்புகளை நெருங்கியுள்ள இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 14,83,156 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 9,52,743 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,83,723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,883 பேர் பலியான நிலையில் 2,21,944 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 2,20,716 ஆக உள்ள நிலையில் 3,571 பேர் பலியாகியுள்ளனர். 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்