ஒரே நாளில் 1,326 பேர் பாதிப்பு; 8 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

திங்கள், 31 அக்டோபர் 2022 (11:28 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில் மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,53,592 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,29,024 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,06,656 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்