மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளாவுக்கு வந்தபோது, "வரும் உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்குகளையும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் பாஜகவின் இலக்கு" என்று கூறினார். அமித் ஷாவின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் பினராயி விஜயன், "இந்த அறிக்கை, பாஜகவின் முக்கிய இலக்கு கேரளம் என்பதைத் தெளிவாக காட்டுகிறது," என்று குறிப்பிட்டார்.