வடக்கு வங்காளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பூஜா கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "நிவாரணப் பணிகளைத் தடுப்பதற்காகவே மம்தா தனது கூலிகளை ஏவிவிட்டு, பா.ஜ.க. தலைவர்களை தாக்கச் செய்கிறார்" என்று 'எக்ஸ்' தளத்தில் குற்றம் சாட்டினார்.
மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார், "காகேன் முர்மு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை என்பதை நிரூபிக்கிறது. இதற்கு ஜனநாயக வழியில் போராடுவோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.